அக்டோபர் மாத ராசி பலன் 2021: மேஷம், ரிஷப ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்த மாதம்
அக்டோபர் மாதத்தில் மேஷம்,ரிஷபம் ராசிக்காரர்களுக்கு அற்புதங்கள் நிகழப்போகிறது. கிரகங்களின் சஞ்சாரம் பார்வையைப் பொறுத்து இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கும் என்ன பலன் கிடைக்கும். பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
சென்னை: அக்டோபர் மாதம் பிறக்கப்போகிறது. இந்த மாதத்தில் வாழ்க்கையின் துன்பத்தை தொலைத்து விட்டோம் என்று பாடப்போகும் ராசிக்காரர்கள் இருக்கிறார்கள். மேஷம், ரிஷபம் ராசிக்காரார்களுக்கு இன்பமும்,மகிழ்ச்சியும் அதிகரிக்கப்போகிறது. அக்டோபர் மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ரிஷப ராசியில் ராகு, கன்னி ராசியில் சூரியன்,செவ்வாய், துலாம் ராசியில் புதன், சுக்கிரன்,விருச்சிக ராசியில் கேது, மகர ராசியில் சனி,குரு என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.
அக்டோபர் 1ல் புதன் கன்னி ராசிக்கு மாறுகிறார். அக்டோபர் 2ஆம் தேதியன்று சுக்கிரன் விருச்சிக ராசிக்கு மாறுகிறார். சனிபகவானின் வக்ர சஞ்சாரம் முடிவுக்கு வருகிறது. மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நவ கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது.
புதுமண தம்பதிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பஞ்சாப் முதல்வர் சன்னி.. நெகிழ்ச்சியில் மணமக்கள்
ராசிக்கு பத்தாம் வீட்டில் உள்ள குருவும், சனியும் இந்த மாத பிற்பகுதியில் வக்ர நிவர்த்தி அடைகின்றன. சுக்கிரன் விருச்சிக ராசிக்கு அக்டோபர் 2ஆம் தேதி பயணம் செய்கிறார். வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். சனி, குரு சாதகமாக உள்ளது.
வேலையில் மாற்றம்
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு சனி குரு கூட்டணியால் வேலையில் புதிய மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றாலும் செவ்வாய், சூரியன் கூட்டணி 6வது வீட்டில் உள்ளதால் பெரிய எதிர்ப்பை சமாளிக்க வேண்டியிருக்கும்.
சுக்கிரன் எட்டாவது வீட்டில் கேது உடன் இணைந்துள்ளார். மனதில் ஆசைகள் அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படாது. சிலருக்கு பிரிவினை ஏற்பட வாய்ப்புள்ளது. சண்டைகள் வரலாம் விட்டுக்கொடுத்து செல்லவும்.
அரசு தேர்வில் வெற்றி
17ஆம் தேதி சூரியன் இடப்பெயர்ச்சியாகி ஏழாம் வீடான துலாம் ராசியில் நீச்சமடைகிறார். சூரியனுக்கு சனி பார்வை கிடைப்பதால் நீச்சபங்க ராஜ யோக அமைப்பும் பெறுகிறார். ராசிநாதன் செவ்வாய்,புதன் இடமாற்றம் சில சாதக பாதங்களைத் தரலாம். வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவ ஆலோசனை அவசியம். அரசு வேலைக்காக போட்டித் தேர்வுகள் எழுதுபவர்களுக்கு வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது. குருவின் பார்வை சூரியன், செவ்வாய் மீது விழுகிறது. அமைதியும் நிதானமும் தேவைப்படும் மாதம். இருக்கிற வேலையை தக்கவைத்துக்கொள்ளுங்கள். புதிய இடமாற்றம் வந்தாலும் தவிர்த்து விடுவது நல்லது. மனரீதியாக ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும் நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்த மாதமாக அக்டோபர் மாதம் அமைந்துள்ளது.
வருமானம் அதிகரிக்கும்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு இந்த மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் உங்கள் ராசியில் ராகு, ஐந்தாம் வீட்டில் சூரியன், செவ்வாய், ஆறாம் வீட்டில் புதன், சுக்கிரன்,ஏழாம் வீட்டில் கேது, ஒன்பதாம் வீட்டில் சனி, குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. வேலையில் முன்னேற்றம் உண்டாகும். வருமானம் இரட்டிப்பாகும். ராசி அதிபதி சுக்கிரன் ஏழாவது வீட்டில் கேது உடன் இணைவதால் குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும். உங்களுக்கு நீங்களேதான் கெடு பலனை செய்ய முடியும்.
மருத்துவ செலவுகள்
உணவு விசயத்தில் கவனம் தேவை. பயணங்களில் கவனமும் விழிப்புணர்வும் அவசியம். ரிஷப ராசிக்காரர்கள் இந்த மாதம் புது முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. ஞானகாரகன் கேது உடன் ராசி நாதன் சுக்கிரன் இணைந்துள்ளார். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. மருத்துவ செலவுகள் வர வாய்ப்புள்ளது. மருத்துவர்களை அவசியம் ஆலோசனை செய்வது அவசியம். வேலையில் உங்களின் கவனச்சிதறல் அதிகரிக்க வாய்ப்புள்ளது கவனம் தேவை.
சந்தோஷம் நிறைந்த மாதம்
திருமணம், புத்திரபாக்கியம் திருப்திகரமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வி யோகம் கை கூடி வரும். அறிவுத்திறன் அதிகரிக்கும். குருவின் பார்வை குதூகலத்தைத் தரும். பெண்கள், இல்லத்தரசிகளுக்கு டென்சன் நிறைந்த மாதம், பொறுப்புகள் அதிகரிக்கும் சவால்களை சமாளியுங்கள். சக்தியும், சந்தோஷம் நிறைந்த மாதமாக அக்டோபர் மாதம் அமைந்துள்ளது.