BhavaniSagar Dam Water Level Today | பவானிசாகர் அணை நீர்மட்டம் இன்று
பவானிசாகர் அணையின் வரலாறு;
தெற்கு ஆசியாவின் மிகப் பெரிய மண் அணை எனப் பெயரும் தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய அணை எனும் சிறப்புப் பெயரும் பெற்றது பவானிசாகர் அணை. தமிழ்நாட்டிலுள்ள ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலிருந்து சுமார் 17 கிலோ மீட்டர் தொலைவில், மாயாறும், பவானி ஆறும் ஒன்றுகூடும் இடத்தில் உள்ளது, இந்த பவானிசாகர் அணை. 1948 ஆம் ஆண்டு சுமார் பத்துக் கோடியே ஐம்பது லட்சம் செலவிடப்பட்டு இந்த அணையை கட்டும் பணி தொடங்கப்பட்டது. ஏறத்தாழ சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஒன்று சேர இந்த அணையின் கட்டுமான பணி துவங்கப்பட்டு, அடுத்த ஏழு ஆண்டுகளில் வெற்றிகரமாக கட்டி முடிக்கப்பட்டது. 1955 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19-ம் தேதி, அப்போதைய தமிழ்நாடடின் முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராஜர் பவானிசாகர் அணையை திறந்து வைத்தார்.
எங்கு உள்ளது பவானிசாகர் அணை?
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் என்ற கிராமத்திற்கு அருகில் கட்டப்பட்டுள்ளது பவானிசாகர் அணை. இந்த அணை, முழுக்க முழுக்க மண்ணால் கட்டப்பட்ட அணையாகும் . மேலும் இந்த அணை ஆசியாவில் மிகப்பெரிய 'மண் அணை' என்றும் சொல்லப்படுகிறது. தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருக்கும் பவானி ஆறு, அங்குள்ள பல ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசனத்திற்காவும் பயன்படுத்தப்படுகிறது.
எந்த ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது பவானிசாகர் அணை?
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியாக வரும் பவானி ஆற்றுடன் நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் மோயாறு கலக்கும் இடத்தில் கீழ், பவானி திட்டம் மூலம் அணை கட்டப்பட்டுள்ளது. இதனால் உண்டான நீர்தேக்கத்திற்கு பவானிசாகர் நீத்தேக்கம் என்று பெயர்.
பவானிசாகர் அணை முழு கொள்ளளவு விவரம்:
பவானிசாகர் அணையால் 32.8 டிஎம்சி வரையான நீரை தேக்கிவைக்க முடியும். அணையின் மொத்த உயரம் 120 அடி. அதில் உள்ள சேறு, சகதியெல்லாம் கழித்தால், 105 அடியாகக் கணக்கில் கொள்ளப்படுகிறது. பவானிசாகர் அணையின் மூலம் 16 மெகவாட் மின்சாரம் உற்பத்திசெய்யப்படுகிறது. இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள 2.7 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
பவானிசாகர் அணை வானிலை:
ரம்மியமான இயற்கை சூழலின் மத்தியில் இந்த பவானிசாகர் அணை அமைந்துள்ளதால் இங்கு இதமான குளிர் காற்று எப்போதும் வீசும். சில சமயங்களில் குறைந்தளவு தண்ணீர் இருந்தாலும் கூட குளிர்ச்சியான காற்று வீசுவதால் சுற்றுலா பயணிகள் வருகை எப்பொழுதும் கணிசமான எண்ணிக்கையில் இருக்கும்.
டணாய்க்கன்_கோட்டை:
பவானிசாகர் அணைக்குள் ஓர் வரலாற்றுச்சிறப்பு மூழ்கிக் கிடக்கிறது. அதாவது டணாய்க்கன்_கோட்டை என்றழைக்கப்படும் ஓர் வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் கோட்டை பவானிசாகர் அணை நீருக்குள் மூழ்கிக் கிடக்கிறது. கோடைக்காலங்களில் அணையில் நீர் வற்றிய பிறகு அந்தகோட்டை நம் கண்களுக்குப் புலப்படுகிறது.
ஹொய்சாளர் ஆட்சிக்காலத்தில் படைத்தளபதியான பெருமாள் தண்டநாயக்கனைப் பாராட்டி வழங்கப்பட்ட குறுநிலத்தை அவன் ஆண்டு வந்த போது கி.பி 1254ம் ஆண்டு ஆற்றுச்சமவெளியில் இந்தக் கோட்டையைக் கட்டி ஆண்டான். தண்டநாயக்கன் கோட்டை நாளடைவில் டணாயக்கன் கோட்டை ஆனது. பல நூறு ஆண்டுகள் ஆன பின்பும் கூட இன்னும் உறுதியுடன் கம்பீரமாய் நிற்கும் இந்தக்கோட்டையைப் பார்க்கும்போது அன்றையக் கட்டிடக்கலையின் நுட்பம் விளங்கும்.
பவானிசாகர் அணை - அருகிலுள்ள சுற்றுலா தலங்கள்:
ஆனைமலை சரணாலயம், நிலம்பூர், பண்ணாரி அம்மன் கோவில், மருதமலை கோவில், பொள்ளாச்சி, சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம், கோவை ஆகிய சுற்றுலா தளங்கள் பாபநாசம் அணைக்கு அருகே அமைத்துள்ளது.
பவானிசாகர் அணை - பார்வையிடும் நேரம்:
பவானிசாகர் அணையை பார்வையிட சுற்றுலாப்பயணிகளுக்கு அனைத்து வார நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 6.30 மணி வரை அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கு நுழைவு கட்டணமாக 5 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதியும் இங்கு செய்யப்பட்டுள்ளது.