இந்தியாவில்தான் உலகிலேயே அதிக அளவிலான கட்சிகள் உள்ளன. கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன. காங்கிரஸ் கட்சியைத் தவிர மற்ற அத்தனையும் சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்தவையாகும். சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் அரசியலில் நேருதான் பிரதானமாக இருந்தார். அவரே நாட்டின் முதல் பிரதமராகவும் உருவெடுத்தார் நவீன இந்தியாவின் சிற்பியாக நேரு போற்றப்படுகிறார். பாபு ராஜேந்திர பிரசாத் நாட்டின் முதல் குடியரசுத் தலைவராக இருந்த பெருமைக்குரியவர். மேலும் 12 ஆண்டு காலம் குடியரசுத் தலைவர் பதவியை வகித்து நீண்ட காலம் குடியரசுத் தலைவராக இருந்தவர் என்ற பெருமையையும் அவர் வைத்துள்ளார். ஒவ்வொரு கட்சியும் தான் செய்யப் போகும் செயல்கள் குறித்து நாட்டு மக்களுக்கு தேர்தல் அறிக்கைகள் வாயிலாக உறுதியளிக்கின்றன. இந்தப் பிரிவில் அனைத்துக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் குறித்து விரிவாகக் காண முடியும்.