For Daily Alerts
Just In
நானே உண்மை, நானே பொய்யும்..
வீடுபேரும் கொடுத்து
போக்கிடமும் போய்திரும்பாவிடமும் காட்டி
பிறக்கவும் இருக்கவும் இறக்கவும் செய்து
தன்முகம் காட்டா கடவுளிடம் இல்லை
பயமெனக்கு....
நானில்லா நிலையறுக்க நா நிலமும் சுத்திவந்து
தேடிக்கிடைக்கா இறையிடம் உரைய
நானே உண்மை, நானே பொய்யும்
நானே கடவுள், நானே மந்திரம்
அனைத்தும் நானே.....சொல்லும்செயலும் நானேவென
சொல்லிப்போன பின்னுணர்ந்தேன்
"நான்" இல்லா நிலையிலில்லை நானும் கடவுளும்
தொட்டுணரும் காற்றும் நுகர்ந்துணரும் மணமும்
ஆழ்கடலும் மழையும் மேகமும் நிலவும்
மரம்செடிகொடிகளும் கூட்டமாய்பறக்கும் பறவைகளும்
தெய்வமெனக்கொண்டால் மந்திரமில்லாமலும்
உண்டிகாசில்லாமலும் அணுகலாம்-
சாமிக்கு அறையெதுக்கு பிரபஞ்சம் முழுதும்
நிறைந்திருக்கும் இறை...
அர்ச்சனையும் தேவையில்லை ஆரத்தியும் தேவையில்லை
இடையேவொரு அர்ச்சகரும் தேவையில்லை
இயற்கையேதெய்வமெனில்
இறைஞ்சுவேனதை..
Comments
Story first published: Tuesday, November 10, 2009, 10:50 [IST]