For Daily Alerts
Just In
நீ சபிக்கிறாய் நான் ரசிக்கிறேன்
காத்திருப்பது நிஜமென்றாலும்
மழைபெய்யும்போது திட்டாமலிருப்பதில்லை....
காத்திருத்தலின் போது மழைபெய்வது
சுகமும் சுகமற்றதுமாய்
கடலைக்காரனும் நானும் காத்திருந்து கிளம்பினோம்....
இடியும் மழையும் கருத்த இரவும் கழிந்தது நீயற்று
மழை மேகமெல்லாம் மழையாகிவிடுவதில்லை
ஒருதலையாய் நான் காதலித்த பல பேர் போல..
நிஜமாயிருப்பதில்லை நானும் மழையும்
உன் உடலெங்கும் ஊடுருவும் மழையை
பொறாமையாகவே பார்க்கிறேன்...
நீ சபிக்கிறாய் நான் ரசிக்கிறேன்
இத்தனைக்குப் பின்னாலும் இருக்கிறது
பாதசாரிகளின் வாழ்க்கை
வழக்கத்தைவிட மோசமாய்
ஓட்டு வங்கிகளுக்கும்
ஓட்டு வாங்கிகளுக்குமான போராட்டமது....
மின்னலென சிரிக்கிறாய் நீ
வானமெனக்கிழிகிறேன் நான்
- ரிஷி சேது
Comments
Story first published: Monday, December 7, 2009, 14:01 [IST]