For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீ வெக்கிச் சிவக்கிறாய்...!

Google Oneindia Tamil News

ஒவ்வொரு துளியாய் வழிய விடுகிறது
பிஞ்சுக் கைகளிடையே வீழும் மழை
அள்ளிக்குடிக்கிறான் கையில் தேங்கும் சில துளிகளை
குடைக்குள்ளிருந்து பார்க்கிறேன் நான்
எது தடுக்கிறது நனைய்த் துடிக்கும் மனதை?

One rainy day

வர்ணம் தேயும் வானவில்லை
ஏந்திய சில துளிகள் வீசி
துடைப்பதாய் பாவிக்கிறான்
வேற்றிடம் தேடும் குருவிகள் மீதவை பட்டுத் தெறிக்கின்றன
வானவில் குமிழிகளாய்

எழுத எத்தனித்த இக்கணத்தில் வீழும் ஓர் துளி
உன்னை சுமப்பெதன இருக்கிறது
மழையூடும் காற்றின் பரிசம் உன் தொடுகை

மழை அழைப்புகளை புறந்தள்ளும் உன்னை
அழைத்து வந்து முழுதுமாய் நனைய வேண்டும்
அது இந்த ரத்தச்சிகப்பு பெயரறியா பூ நனைவதனவே இருக்கலாம்

நாகரீகம் கருதியல்ல உன் குடைக்குள் வர மறுத்த அந்த மழை நாளில்
நனைவதற்காகவே.. அறிவாயா?
தொடங்கா உரைடாயல்களின் சிலுங்கல்களை
மழை சாரல் சொல்லிப் போனது

தலைகீழாய் தொங்கும் மரக்கிளைகள்
தேங்கிக் கிடக்கும் மழை நீரில்
ஒளிகின்றன உன் பி்ம்பமும் என் பிம்பமும்
காற்றிடை அலையாடும் அவை உரசிக் கொள்கின்றன
நீ வெக்கிச் சிவக்கிறாய்...!

English summary
Here is a poem by Rishi Sethu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X