நீ வெக்கிச் சிவக்கிறாய்...!
ஒவ்வொரு துளியாய் வழிய விடுகிறது
பிஞ்சுக் கைகளிடையே வீழும் மழை
அள்ளிக்குடிக்கிறான் கையில் தேங்கும் சில துளிகளை
குடைக்குள்ளிருந்து பார்க்கிறேன் நான்
எது தடுக்கிறது நனைய்த் துடிக்கும் மனதை?
வர்ணம் தேயும் வானவில்லை
ஏந்திய சில துளிகள் வீசி
துடைப்பதாய் பாவிக்கிறான்
வேற்றிடம் தேடும் குருவிகள் மீதவை பட்டுத் தெறிக்கின்றன
வானவில் குமிழிகளாய்
எழுத எத்தனித்த இக்கணத்தில் வீழும் ஓர் துளி
உன்னை சுமப்பெதன இருக்கிறது
மழையூடும் காற்றின் பரிசம் உன் தொடுகை
மழை அழைப்புகளை புறந்தள்ளும் உன்னை
அழைத்து வந்து முழுதுமாய் நனைய வேண்டும்
அது இந்த ரத்தச்சிகப்பு பெயரறியா பூ நனைவதனவே இருக்கலாம்
நாகரீகம் கருதியல்ல உன் குடைக்குள் வர மறுத்த அந்த மழை நாளில்
நனைவதற்காகவே.. அறிவாயா?
தொடங்கா உரைடாயல்களின் சிலுங்கல்களை
மழை சாரல் சொல்லிப் போனது
தலைகீழாய் தொங்கும் மரக்கிளைகள்
தேங்கிக் கிடக்கும் மழை நீரில்
ஒளிகின்றன உன் பி்ம்பமும் என் பிம்பமும்
காற்றிடை அலையாடும் அவை உரசிக் கொள்கின்றன
நீ வெக்கிச் சிவக்கிறாய்...!