For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உக்ரைன் மொழிக்கே தடை

By A K Khan
Google Oneindia Tamil News

1768ம் ஆண்டில் லித்துவேனியா, போலந்துக்கு எதிராக உக்ரைனில் நடந்த Koliivshchyna புரட்சியில் ஆயிரக்கணக்கான போலந்து மக்களும் அவர்களுக்கு ஆதரவாய் இருந்த jews மக்களும் கொல்லப்பட்டனர்.

1783ம் ஆண்டில் கிரைமியா பகுதியை ரஷ்யா தனது நாட்டுடன் இணைத்தது. இதற்கு New Russia என்ற நாமகரணமும் சூட்டப்பட்டு உக்ரைனியர்களும் ரஷ்யர்களும் ஏராளமாக குடியமர்த்தப்பட்டனர். இதனால், ரஷ்யர்கள் உக்ரைனியர்களிடையே மோதல்கள் வெடித்தன.

Kiev

ரஷ்ய நாட்டை ஜார் மன்னர்கள் ஆண்டபோது உக்ரைன் முழுவதுமே ரஷ்யமயமாக்கப்பட்டதோடு, உக்ரைன் மொழிக்கே கிட்டத்தட்ட தடை விதிக்கப்பட்டது. இதன் பின்னர் உக்ரைனில் அதிக அளவில் துருக்கி மக்கள் குடியேற ஆரம்பித்தனர்.

1768-1774ம் ஆண்டில் ரஷ்யா- துருக்கி இடையே போர் வெடித்தது. அப்போது ரஷ்யாவுக்கு உக்ரைனும் கிரைமியாவும் ஆதரவு தந்தன. மேலும் நாட்டில் துருக்கியர்களை சிறுபான்மையினராக்குவதற்காக ஜெர்மனி மற்றும் பிற ஐரோப்பியர்களுக்கு நாட்டைத் திறந்துவிட்டன உக்ரைனும் கிரைமியாவும். இதனால் ஐரோப்பியர்கள் அதிக அளவில் குடியேற ஆரம்பித்தனர்.

19ம் நூற்றாண்டில் உக்ரைன் கிட்டத்தட்ட ஒரு ஏழை, கிராமப்புற நாடு என்ற அளவுக்கு தரம் தாழ்ந்தது. இதனால் அந்த நாட்டின் மீது ரஷ்யா அதிக அக்கரை செலுத்தவில்லை. இந்த காலகட்டத்தில் உக்ரைனில் இருந்து மக்கள் ரஷ்ய எல்லைப் பகுதிகளில் குடியேற ஆரம்பித்தனர். சைபீரியாவுக்கு ரயில் பாதை அமைக்கப்பட்ட பின் கிட்டத்தட்ட 17 லட்சம் உக்ரைனியர்கள் ரஷ்யாவை ஒட்டிய பகுதிகளில் குடியேற ஆரம்பித்தனர்.

English summary
As Ukraine's new leaders accused Russia of declaring war, Russia's Prime Minister warned that blood could be spilled amid growing instability in the neighboring nation. Kiev mobilized troops and called up military reservists in a rapidly escalating crisis that has raised fears of a conflict. And world leaders
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X