புகுந்தன ரஷ்யப் படைகள்
ஆனால், உக்ரைனில் உள்ள தனது கடற்படைத் தளத்தை பாதுகாக்கவே தனது படைகள் கிரைமியாவுக்குள் நுழைந்துள்ளதாக புடின் பதில் தந்துள்ளார்.
கடந்த மார்ச் 1ம் தேதி உக்ரைனுக்கு ராணுவத்தை அனுப்ப புடினுக்கு அதிகாரம் வழங்கி ரஷ்ய நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றி அமெரிக்காவுக்கு மறைமுக எச்சரிக்கையைத் தந்துள்ளது. புடினுடன் பராக் ஒபாமா ஒன்றரை மணி நேரம் தொலைபேசியில் பேசி கிரைமியாவில் இருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால், உக்ரைனில் வாழும் ரஷ்ய மக்களை காக்க வேண்டிய பொறுப்பு தனக்கு இருப்பதாகக் கூறி, ஒபாமாவின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார் புடின்.
நேற்றைய நிலவரப்படி ஆயிரக்கணக்கான ரஷ்ய ராணுவத்தினர் கிரைமியாவுக்குள் ஊடுருவிக் கொண்டுள்ளனர்.
எங்கள் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது.. உலக நாடுகள் எங்களைக் காக்க வேண்டும் என்று உக்ரைன் பிரதமர் அர்செனிவ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந் நிலையில் இன்று உக்ரைனும் தனது ராணுவத்தை ரஷ்ய எல்லை நோக்கி குவித்து வருவதோடு, ரிசர்வ் படையினரையும் தயார் நிலைக்கு கொண்டு வந்துள்ளது.