For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மக்களை பட்டினி போட்டு கொன்ற சோவியத் யூனியன்:

By A K Khan
Google Oneindia Tamil News

ஆனால், கூட்டு விவசாயம் என்ற பெயரில் சோவியத் யூனியன் கொண்டு வந்த திட்டங்களை உக்ரைன் விவசாயிகள் ஏற்க மறுத்தனர். இதனால் அவர்களின் விளை பொருட்களை சோவியத் யூனியன் வலுக்கட்டாயமாக எடுத்துக் கொண்டதோடு விவசாயிகளை பட்டினி போட்டு கொல்ல ஆரம்பித்தது. மாபெரும் சோவியத் ராணுவம், உளவுப் பிரிவினரை விவசாயிகளால் எதிர்க்க முடியவில்லை. இதனால் பல லட்சம் விவசாயிகள் பட்டினியால் இறந்தனர்.

Famine in Berdyansk Ukraine_-_1922

இதற்கு எதிராக உக்ரைன் மக்கள் போராட்டத்தில் இறங்கியபோது அவர்களை ராணுவத்தைக் கொண்டு கொடூரமாக அடக்கியது சோவியத் யூனியன். 1929-34 மற்றும் 1936-38 ஆண்டுகளுக்கு இடையே சுமார் 7 லட்சம் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

இந் நிலையில் இரண்டாம் உலகப் போர் வெடிக்கவே, போலந்துக்குள் நுழைந்த ஜெர்மனியும் சோவியத் யூனியனும் அந்த நாட்டை இரண்டாகப் பிரித்து கைப்பற்றின. இதில் போலந்து வசம் போன உக்ரைன் பகுதிகளை மீண்டும் உக்ரைனுடன் இணைத்தது சோவியத் யூனியன்.

இதையடுத்து சோவியத் மிரட்டலுக்குப் பணிந்து ருமேனியாவும் தன் வசம் இருந்த உக்ரைன் பகுதிகளை திருப்பித் தந்தது.

English summary
As Ukraine's new leaders accused Russia of declaring war, Russia's Prime Minister warned that blood could be spilled amid growing instability in the neighboring nation. Kiev mobilized troops and called up military reservists in a rapidly escalating crisis that has raised fears of a conflict. And world leaders
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X