சீனா இந்தியா மோதல்
இவ்வளவு பெரிய பண விவகாரம், முதலீடு.. இதில் சண்டை வராமல் இருக்குமா?.
வந்தது.. குறிப்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே தான் பிரச்சனையே வந்தது. யார், யார் எவ்வளவு முதலீடு செய்வது, வங்கியின் தலைமையகம் எங்கே இருக்க வேண்டும், இதன் முதல் தலைவராக யார் இருப்பது என்பதில் இரு நாடுகள் இடையே சிக்கல் நீடித்தது.
தலைமையகம் ஷாங்காயில் அமைக்கப்பட வேண்டும் என சீனாவும் டெல்லியில் அமைக்கப்பட வேண்டும் என இந்தியாவும் மல்லுக்கட்டின.
அதே போல 50 பில்லியன் டாலர் என்பதை 5 நாடுகளும், தலா 10 பில்லியன் டாலர் என, சரிசமமாக முதலீடு செய்ய வேண்டும் என்றது இந்தியா. இதில் ஏதாவது ஒரு நாடு (குறிப்பாக சீனா) அதிக நிதியைப் போட்டுவிட்டு வங்கியை தனது கட்டுப்பாட்டில் எடுக்கக் கூடாது என்பதில் இந்தியா தீவிரமாக இருந்தது. இதை அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொண்டன. சீனா அதிகம் முதலீடு செய்ய முயன்றது. இந்திய எதிர்ப்பால் அடங்கியது.
(முதல்கட்டமாக ஒவ்வொரு நாடும் 2 பில்லியன் டாலர்களை (சுமார் ரூ. 12,000 கோடி) பணமாகவும், 8 பில்லியன் டாலர்களை (ரூ. 48,000 கோடி) வங்கி கேரன்டிகளாகவும் வழங்கும்)
இல்லாவிட்டால் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவை அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பானிடம் மாட்டிக் கொண்டது மாதிரி இந்த வங்கியும் சீனாவின் கட்டுப்பாட்டில் போயிருக்கும்.