இந்தியாவின் அச்சம்
பல விட்டுக் கொடுத்தல்களுடன் வங்கி உருவாக்கப்பட்டுவிட்டாலும் பொருளாதாரத்தில் உலகின் இரண்டாவது மிகப் பெரிய நாடான சீனா தனது ஆளுமையை உலகளவில் பரப்ப இந்த வங்கியை நிச்சயம் பயன்படுத்திக் கொள்ளும் என்ற அச்சமும் பிற நாடுகளிடம் உள்ளது.
காரணம், இந்த பிரிக்ஸ் வங்கியில் பிற நாடுகளும், குறிப்பாக மெக்சிகோ. இந்தோனேஷியா, அர்ஜென்டினா ஆகிய நாடுகள், இணைய அனுமதி அளிக்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. (மெக்சிகோ. இந்தோனேஷியா, அர்ஜென்டினா ஆகியவை தங்களது கடன் அளவைக் குறைத்தால் பிரிக்ஸ் வங்கியில் இணைய அனுமதிக்கப்படும்) ஆனால், இதை உருவாக்கிய 5 நாடுகளிடம் தான் நிர்வாகம் இருக்கும். அதாவது மொத்த முதலீட்டில் 55 சதவீதம் எப்போதுமே இந்த 5 நாடுகள் வசமே இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்படும். புதிதாக வரும் நாடுகளை வளைக்க சீனா தனது பொருளாதார பலத்தை பயன்படுத்தலாம் என்பது இந்தியாவின் அச்சமாக உள்ளது தனிக்கதை.