என்னதான் பிரச்சனை
இன்றைய நிலவரப்படி உக்ரைன் கடல் பகுதிக்கு தனது 2 போர்க் கப்பல்களை அனுப்பியுள்ளது ரஷ்யா. இவை தவிர பல ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல்களும் கருங்கடல் பகுதியில் நடமாட ஆரம்பித்துள்ளன.
ரஷ்யாவுக்கு உக்ரைன் எப்போதும் தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதே நோக்கம். எப்போதுமே உக்ரைன் ரஷ்ய கட்டுப்பாட்டில் இருப்பதா, அதை ஐரோப்பிய யூனியனுக்குள் கொண்டு வந்து அந்த நாட்டை தான் மறைமுகமாக கட்டுப்படுத்த வேண்டும் என்பது அமெரிக்காவின் நோக்கம்.
உக்ரைன் ஐரோப்பிய யூனியனின் கட்டுப்பாட்டில் போய்விட்டால், ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிக் கொண்டு அந்த நாட்டில் அமெரிக்க ராணுவம் கால் பதிக்கும் என்பதும், போலந்தில் நிறுவியது மாதிரி ரஷ்யாவுக்கு எதிரான ஏவுகணைகளும் ஏங்கு வானம் பார்த்து நிற்கும் என்பதும் புடினுக்குத் தெரியாதா என்ன?
சண்டை என்னவோ அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் தான்.. ஆனால், அதில் பகடைக்காய் உக்ரைன்!