அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் மயக்கமடைந்த செவிலியர் நலம்!
லண்டன்: அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் மயக்கம் அடைந்த செவிலியர் உயிரிழந்துவிட்டதாக பரவும் தகவல்களில் உண்மை எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது.
உலக நாடுகள் முழுவதும் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்துவதில் மும்முரமாக உள்ளன. இன்னொரு பக்கம் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்காவில் புதிய வீரிய வகை கொரோனா தாக்குதலை தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட செவிலியர் டிஃபானி பாண்டிஸ் டோவர் திடீரென மயங்கி விழுந்தார். அவர் மயங்கி விழுந்த நிலையில் மரணம் அடைந்துவிட்டதாகவும் செய்திகள் பரவின.
உண்மையில் செவிலியர் டிஃபானி நலமுடன் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக எந்த ஒரு ஊசியை போட்டுக் கொண்டாலும் செவிலியர் டிஃபானிக்கு அடுத்த 15 நிமிடங்களில் மயக்கம் வந்துவிடுமாம்.
அந்த தாக்கத்தில்தான் இப்போது செவிலியர் டிஃபானி மயங்கி விழுந்தது உறுதியாகி உள்ளது. ஆகையால் கொரோனா தடுப்பூசி போட்டதால் செவிலியர் டிஃபானி இறந்துவிட்டதாக வெளியான செய்திகள் அனைத்தும் வதந்தியே. நம்பவேண்டாம்.
Fact Check
வெளியான செய்தி
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டதால் மயக்கம் அடைந்த செவிலியர் மரணம்
முடிவு
கொரோனா தடுப்பூசி போட்டதால் மயங்கி விழுந்த செவிலியர் உயிருடனே உள்ளார்.