1990-2021 வரை பணியாற்றியவர்களுக்கு ரூ.12 லட்சம் கிடைக்குமாம்.. பரவும் போலி செய்தி
சென்னை: 1990 முதல் 2021வரை பணியாற்றியவர்களுக்கு மத்திய அரசின் தொழிலாளர் அமைச்சகம், ரூ .12 லட்சம் வழங்குவதாக ஒரு வெப்சைட்டில் தகவல் இடம் பெற்று அது சிலரால் பரப்பப்படுகிறது. ஆனால் அது போலி தகவல்.
1990 மற்றும் 2021ம் ஆண்டுக்கு இடையில் நிறுவனங்களில் பணியாற்றியவர்களுக்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்திலிருந்து ரூ .12 லட்சம் திரும்பப் பெற உரிமை உண்டு என்று குறிப்பிட்ட வெப்சைட் கூறுகிறது. உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்த்துக் கொள்ளலாம் என்றும் அது கூறுகிறது.
மேலும், அந்த வெப்சைட் மூன்று எளிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்படி கேட்கிறது. உங்கள் பாலின விவரங்களைக் கேட்கிறது.
இந்த செய்தி முற்றிலும் போலியானது. மத்திய அரசு ஊழியர்களுக்காக அரசு அத்தகைய அறிவிப்பை வெளியிடவில்லை. இதுபோன்ற ஏதாவது அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டுள்ளதா என்பதை நாங்கள் கூகுளில் சோதித்தோம். அத்தகைய அறிவிப்பை நாங்கள் காணவில்லை.
அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தால், அது பெரிய அளவுக்கான செய்திகளை உருவாக்கியிருக்கும். மேலும், அனைத்து முக்கிய செய்தி நிறுவனங்களாலும் வெளியிடப்பட்டிருக்கும்.
எனவே இதுபோன்ற போலி செய்திகளில் ஜாக்கிரதையாக இருங்கள். இதுபோன்ற எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://labour.gov.in. இந்த இணையதளத்தில் மட்டுமே அப்டேட்களை பின்பற்றுங்கள் மற்றும் இதுபோன்ற போலி தளங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்.
Fact Check
வெளியான செய்தி
சொல்லப்படுவது: 1991-2021 வரை பணியாற்றிய ஊழியர்களுக்கு அரசு ரூ .12 லட்சம் அளிக்கிறது
முடிவு
கண்டறிந்தது: இந்த தகவல் போலியானது. அரசாங்கம் அத்தகைய அறிவிப்பை வெளியிடவில்லை