முதுகில் குழந்தை.. சைக்கிளில் பயணம்.. இது புலம் பெயர்ந்த பெண் தொழிலாளி கிடையாது, நம்பாதீர்கள் மக்களே
டெல்லி: முதுகில் குழந்தையோடு, பெண் ஒருவர் சைக்கிளில் புலம் பெயர்ந்து தனது சொந்த ஊருக்கு செல்வது போன்ற படம் போலியானது.
சமூக ஊடகங்களில் பரவலாக பரப்பப்பட்டு வரும் போட்டோ இது. கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உள்ள நிலையில் ஒரு பெண் தனது குழந்தையுடன் தங்கள் கிராமத்தை அடைய முயற்சிக்கிறார், அதுவும் சைக்கிளில் குழந்தையை முதுகில் வைத்தபடி அவர் பயணிக்கிறார் என்று சொல்கிறது அந்த மெசேஜ்.
ஆனால் இது போலியானது. குழந்தையுடன் பயணம் செய்யும் பெண்ணின் வீடியோ இந்தியாவிலிருந்து எடுக்கப்பட்டது இல்லை. இது ஒரு பழைய படம். ரிவர்ஸ் படத் தேடலைச் செய்து பார்த்தபோது, இந்த படம் Pinterest இல் ஆக்டிவ் லைஃப் மூலம் பதிவேற்றப்பட்டதை கண்டறிய முடிந்தது.
நேபாளத்தின் நேபாள்குஞ்சில் தாயுடன் பயணிக்கும் குழந்தை போட்டோவாகும். வழக்கமான போக்குவரத்துதான் இது என்று அந்த தகவல் கூறுகிறது. இந்த படத்தை வேறு பல பயனர்களும் வெளியிட்டுள்ளனர். இந்த படம் பழையது மற்றும் அது குறிப்பிடும் பிரச்சினையுடன் தொடர்பு இல்லாதது. எனவே, தயவுசெய்து வதந்திகளை நம்ப வேண்டாம் அல்லது அவற்றை பரப்ப வேண்டாம் என்று, அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
1000 பஸ்கள்.. அதற்குத்தான் இத்தனை மோதல்.. பிரியங்கா காந்தி vs யோகி அரசு! என்ன நடக்கிறது உ.பி.யில்?