கொரோனா.. பொருளாதார நெருக்கடியால் மத்திய அரசு பணியாளர்களுக்கு 1 மாத சம்பளம் கட்டா? உண்மை என்ன?
கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை சமாளிக்க மத்திய அரசு தனது பணியாளர்களின் சம்பளத்தை குறைக்க உள்ளது என்று பொய்யான செய்தி இணையத்தில் பரவி வருகிறது.
டெல்லி: கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை சமாளிக்க மத்திய அரசு தனது பணியாளர்களின் சம்பளத்தை குறைக்க உள்ளது என்று பொய்யான செய்தி இணையத்தில் பரவி வருகிறது.
Recommended Video
கொரோனா வைரஸ் நாடு முழுக்க வேகமாக பரவி வரும் நிலையில் அது தொடர்பான பொய்யான வதந்திகளும் பரவி வருகிறது. முக்கியமாக இந்தியாவின் பொருளாதாரம் தொடர்பாக நிறைய வந்ததிகள் பரவி வருகிறது. மக்களிடம் பணம் பறிக்கும் வகையில் நிறைய வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது புதிய வதந்தி ஒன்று பரப்பப்பட்டு வருகிறது. அதில் மத்திய அரசு தனது அரசின் கீழ் பணியாற்றிய ஓய்வு பெற்ற பணியாளர்களின் பென்ஷன் தொகையை குறைக்க போகிறது என்று கூறப்பட்டுள்ளது. கொரோனாவிற்கு எதிரான பண தேவையை கட்டுப்படுத்தும் வகையில் அரசு இந்த பென்சன் ஒதுக்கீட்டில் 30% எடுக்க போகிறது என்று செய்திகள் வந்தது.
அதேபோல் மத்திய அரசின் பணியாளர்களின் இந்த மாத சம்பளம் குறைக்கப்படும் என்றும் செய்திகள் உலவி வருகிறது. 21 ஊரடங்கு காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை சமாளிக்க இப்படி செய்ய போகிறது என்று செய்திகள் வந்தது.
ஜீன்களின் சிறப்பு சக்தி.. இந்தியர்களுக்கு கொரோனாவிற்கு எதிரான எதிர்ப்பு சக்தி உள்ளதா? உண்மை என்ன?
இது போன்று உலா வரும் செய்திகளை நம்ப வேண்டாம். அதேபோல் இது போல வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகளை யாருக்கும் பரப்ப வேண்டாம். இது முழுக்க முழுக்க பொய்யான செய்தியாகும். மத்திய அரசு அப்படியான அறிவிப்பை வெளியிடவில்லை, அதற்கான திட்டத்திலும் இல்லை என்பது குறிப்பிடதக்கது.