மத்திய அரசு ஊழியர்களின் 30% ஊதியம் குறைப்பு என்பது பொய் செய்தி
டெல்லி: கொரோனா லாக்டவுனால் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் 30% குறைக்கப்படும் என ஊடகங்களில் வெளியான செய்திகள் பொய்; தவறானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் லாக்டவுனை முன்வைத்து ஏராளமான வதந்திகள் வலம் வருகின்றன. இப்படியான வதந்திகளை மத்திய அரசு தெளிவாக மறுத்து விளக்கம் அளித்து வருகிறது.
இதில் ஒன்றுதான் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தில் 30% குறைக்கப்பட இருக்கிறது என்கிற செய்தி. அத்துடன் இதில் இருந்து குரூப் டி பணியாளர்களுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மத்திய அரசு அறிவித்த சிறப்பு ரயில்களில் 75% உபி, பீகாருக்குதான்!
ஆனால் மத்திய நிதி அமைச்சகம் இந்த செய்திகள் பொய்யானது என விளக்கம் அளித்திருக்கிறது. தற்போதைய நிலையில் மத்திய அரசு பணியாளர்களின் ஊதியத்தை குறைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் இது போன்ற செய்திகள் வதந்தி என்றும் அடிப்படை ஆதாரமற்றவை என்றும் விளக்கம் தரப்பட்டுள்ளது.