மொபைல் டவர் அமைப்பதற்கு நோ அப்ஜெக்சன் சான்றிதழை மத்திய அரசு வழங்குகிறது என்பது பொய்யான தகவல்
டெல்லி: உங்கள் இடத்தில் மொபைல் டவர்கள் அமைப்பதற்கு தடையில்லா சான்றிதழை (நோ அப்ஜெக்சன்) மத்திய அரசு வழங்கி வருவதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஷேர் செய்ய்யப்படும் தகவல் பொய்யானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சகத்தின் தடையில்லா சான்றிதழ் என்ற பெயரில் ஒரு படம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அதில், இடத்தின் உரிமையாளருடன் நீங்கள் போட்ட ஒப்பந்தம் எங்களுக்கு கிடைக்கப்பெற்றது.
உங்கள் இடத்தில் மொபைல் டவர் அமைப்பதற்கு நிறுவனம் ஒப்புக் கொண்டிருக்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இடத்தின் உரிமையாளர் தொலைத் தொடர்பு துறைக்கு ரூ3,000 டெபாசிட் செலுத்த வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டிருக்கிறது.
ஆனால் இப்படியான ஒரு சான்றிதழை வழங்கவே இல்லை; இது முற்றிலும் பொய்யானது என தொலைத்தொடர்புத் துறை விளக்கம் அளித்திருக்கிறது. இதனை நம்பி நீங்கள் பணம் கட்டி ஏமாந்துவிட வேண்டாம்; இவை போலி சான்றிதழ் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
Fact Check
வெளியான செய்தி
மொபைல் டவர்களை அமைப்பதற்கு மத்திய அரசு தடையில்லா சான்றிதழ் வழங்குகிறது; இதற்கு ரூ3,000 செலுத்த வேண்டும்.
முடிவு
மத்திய அரசு மொபைல் டவர் அமைப்பதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்குவதாக அறிவிக்கவில்லை.