என்னது தாவூத் இப்ராஹிமுடன் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங்கா? ஷேர் செய்யப்படும் பொய் தகவல்
டெல்லி: நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுடன் பாலிவுட் நட்சத்திரங்கள் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் என்ற கேப்சனுடன் சமூக வலைதளங்களில் பொய்யான ஒரு படம் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் மரண விவகாரம் திரை உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. சுஷாந்த் சிங் மரணத்துக்கு நீதி கோருகிறோம் என்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் குழுக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இத்தகைய குழுக்களில் ஒரு படம் வைரலாக ஷேர் செய்யப்படுகிறது. அதில், தாவூத் இப்ராஹிமுடன் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், மகேஷ் ஷெட்டி ஆகியோர் இருக்கிறார்கள் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த படம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இந்த படம் 2013-ம் ஆண்டு இப்தார் விருந்தின் போது எடுக்கப்பட்டது. பன்சாலி இயக்கிய ராம் லீலா திரைப்பட ஷூட்டிங்கின்போது இப்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் ரன்வீர் சிங், தீபிகா நடித்திருந்தனர். 2013-ல் இன்ஸ்டாகிராமில் சந்தீப்சிங் இந்த படத்தை ஷேர் செய்தும் இருக்கிறார்.
Fake News Buster: சாலை முழுக்க சேறும், சாக்கடையும்.. வாரணாசி சாலையா இப்படி? உண்மை என்ன?
இதில் தாவூத் இப்ராஹிம் என குறிப்பிடப்படுபவர், வாசிக் கான். சினிமா ஆர்ட் டைரக்டர். ராம் லீலா உள்ளிட்ட பல படங்களுக்கு பணியாற்றியவர். இதனால் தாவூத்துடன் பாலிவுட் நட்சத்திரங்கள் இருப்பதாக கூறப்படுவது பொய்யான தகவல்.
அண்மையில் 20 ஆண்டுகளாக பாகிஸ்தானில்தான் தாவூத் இப்ராஹிம் பதுங்கி இருப்பதாக அந்த நாடு கூறியிருந்தது. இதனைவைத்து சிலர் இப்படியான பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.
Fact Check
வெளியான செய்தி
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுடன் தீபிகா படுகோனே, ரன்வீர் சின் இருப்பதாக ஷேர் செய்யப்படுகிறது படம்.
முடிவு
இந்த படத்தில் தாவூத் இப்ராஹிம் என சுட்டிக்காட்டப்படுகிற நபர் ஆர்ட் டைரக்டர் வாசிக் கான்.