தவறு.. zoom ஆப்புக்கு பதிலாக மத்திய அரசால் நமஸ்தே ஆப் தயாரிக்கப்படவில்லை
டெல்லி: Zoom ஆப் பயன்படுத்துவது செல்போனின் பாதுகாப்பு அம்சங்களுக்கு ஊறு விளைவிக்கும் என்று, உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில்தான், Namaste என்ற பெயரில் மத்திய அரசு ஒரு ஆப் தயாரித்துவிட்டதாக ஒரு ஊடகத்தில் செய்தி வெளியானது. இதை அரசு மறுத்துள்ளது.
சே நமஸ்தே என்ற பெயரில் உருவாகும் ஆப், ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோனில் விரைவில், வெளியாக உள்ளதாக அந்த ஊடகம் செய்தி கூறியிருந்தது. இது தவறான தகவல். அரசு இப்படியான எந்த ஆப்பையும், தயாரிக்கவில்லை. ஜூம் ஆப் பயன்படுத்தினால், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று, உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கான்பரன்ஸ் அறைக்குள், அங்கீகாரமற்று நுழைவதற்கு தடை விதிக்கலாம்
கான்பரன்ஸில், அங்கீகாரமற்ற பயனர்களை அனுமதிக்க வேண்டாம்
ஒவ்வொரு மீட்டிங்கிற்கும் புதிய பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை அமைத்தல் நல்லது
கான்பரன்ஸ் நடத்துவோர் ஒப்புக் கொள்ளும்போது மட்டுமே ஒவ்வொரு பயனரும் நுழைய முடியும் வகையில் செட்டிங்ஸ் செய்ய வேண்டும்
Recommended Video
இவ்வாறு பல நிபந்தனைகளை கொடுத்துள்ளது. எனவே மத்திய அரசு புதிய ஆப் எதையும் தயார் செய்யப்போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது.