திருச்சி என்.ஐ.டியில் 102 காலியிடங்கள்...18- ந்தேதி கடைசி நாள்... உடனே அப்ளை பண்ணுங்க!
திருச்சி: திருச்சி என்.ஐ.டியில் காலியாக உள்ள 102 பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
எழுத்து தேர்வு உள்ளிட்ட தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். வருகிற 18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
திருச்சிராப்பள்ளியில் செயல்படும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில்(என்.ஐ.டி) 102 இடங்கள் காலியாக உள்ளன. இங்கு காலியாக உள்ள Junior Assistant, Senior Assistant/ Stenographer, Superintendent, Technician, Senior Technician & Technical Assistant / Junior Engineer / SAS Assistant / Library and Information Assistant ஆகிய பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 10+2தேர்ச்சி/ அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் டிகிரி/எஞ்சினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 27 முதல் 33 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 18.01.2021 ஆகும்.
Screening Test/ Skill Test/ Written Test ஆகிய தேர்வுகள் மூலம் தகுதி வைத்தவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு என்.ஐ.டி.யின் அதிகாரபூர்வ இணையதளத்தை பார்த்து அறிந்து கொள்ளலாம்.