நீங்க வங்கியில் இருந்து ஓய்வு பெற்றவர்களா... அப்போ இதை படிங்க... ஐ.ஓ.பி.யில் 15 பணியிடங்கள் இருக்கு!
சென்னை: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 15 ஓய்வு பெற்ற அதிகாரிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தேர்வு செய்யப்படுபவர்கள் இந்தியா முழுவதும் 15 இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள். மாதம் ரூ. 30,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 15 ஓய்வு பெற்ற அதிகாரிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும் திறமையும் உள்ளவர்கள் தபால் முறையில் 25.03.2021 வரை விண்ணப்பங்கள் அனுப்பலாம்.
இதற்கு விண்ணப்பிக்கும் அதிகாரிகள் 31.12.2018 அன்று அல்லது அதற்குப் பிறகு வங்கியில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பிக்கும் நேரத்தில் அவர்களின் வயது அதிகபட்சம் 63-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படுபவர்கள் இந்தியா முழுவதும் 15 இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள். நேர்காணல் முறை மூலம் தேர்வு செய்யப்படுவர்களுக்கு மாதம் ரூ. 30,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது. THE DEPUTY GENERAL MANAGER, Indian Overseas Bank, Compliance Department, Central Office, 5th Floor, Annexe Building 763, Anna SalaiChennai - 600 002 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.