சென்னை கால்சென்டர்களுக்கு ஃப்ரஷர்கள் தேவை.. நீங்களும் விண்ணப்பிக்கலாமே
சென்னை: சென்னையிலுள்ள, தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் செயல்படும் கால் சென்டர்களுக்கு ப்ரெஷர் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.
கஸ்டமர் சர்வீஸ் எக்ஸ்சிகியூட்டிவ் பணிக்கு முழு நேரம் பணியாற்ற ஃப்ரெஷர்கள் தேவைப்படுகிறார்கள். பணியிடம் சென்னை. இப்பணிக்கான கல்வி தகுதி, ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சராசரி பேச்சுத்திறன் இருந்தால் போதுமானது.
28ம் தேதி வியாழக்கிழமை முதல் ஆகஸ்ட் 6ம் தேதி சனிக்கிழமை வரை தினமும் நேர்காணல் நடைபெற உள்ளது.
திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 7.30 மணி முதல் 11.45 மணிவரையிலும், மதியம் 3.30 மணி முதல் இரவு 7.30 மணிவரையிலும் நேர்காணல் நடைபெறும்.
சனிக்கிழமைகளில் காலை 7.30 மணி முதல் 11.45 மணிவரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10.45 மணி முதல் மதியம் 2.30 மணிவரையிலும் நேர்காணல் நடைபெறும்.
தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏதாவது ஒன்றும், கூடவே சராசரி ஆங்கில அறிவும் பெற்றிருப்போர் நேர் காணலில் பங்கேற்கலாம். பயோடேட்டா, ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஒரு ஐடி ஃப்ரூப் ஜெராக்ஸ் கொண்டு செல்லுவது அவசியம்.
மேலும் விவரங்களுக்கும், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், இங்கு கிளிக் செய்யவும்.