எல்லை பாதுகாப்பு படையில் வேலை வாய்ப்பு.. விண்ணப்பிக்க டிச.31 கடைசி நாள்
டெல்லி: எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 53 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்லை பாதுகாப்பு படையில் BSF-Border Security Force). விமானிகள், பொறியாளர், & லாஜிஸ்டிக் ஆபிசர் ஆகிய பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளமான bsf.nic.in இல் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் கடைசி நாள் 31 டிசம்பர் 2020 ஆகும்.
நிறுவனத்தின் பெயர்: எல்லை பாதுகாப்பு படை (Border Security Force)
விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: bsf.nic.in
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள், பாதுகாப்பு துறை வேலைகள்
பணி: விமானிகள், பொறியாளர் மற்றும் லாஜிஸ்டிக் அதிகாரி (Pilots, Engineer, & Logistic Officer)
காலியிடங்கள்: 53
கல்வித்தகுதி: B.E, B.Tech
வயது: 22 - 28 வருடங்கள்
சம்பளம்: மாதம் ரூ. 1,31,100 - 2,16,600/-
பணியிடம்: டெல்லி, ராஞ்சி, ராய்பூர், குவஹாத்தி, அகர்தலா, ஸ்ரீநகர்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, மற்றம் உடல் தேர்வு, மருத்துவ தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31 டிசம்பர் 2020
தகுதி: அதிகாரப்பூர்வ இணையதளத்திலோ அல்லது கீழே உள்ள லிங்கிலோ பாருங்கள்