மாசம் பொறந்தா ஒன்றரை லட்சம் சம்பளம்.. சென்னை சிப்காட்டில் பணி.. அப்ளிகேஷனை ஈமெயில்ல அனுப்புங்க!
சென்னை: சென்னை சிப்காட் லிமிடெட்டில் புதிய வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு ஒன்று வெளியானது. ஒரே ஒரு காலி பணியிடத்திற்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது.
கன்சல்டன்ட் பணிக்காக ஒரே ஒரு காலி பணியிடம் உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கடைசி தேதி வரும் 17ஆம் தேதி ஆகும். விண்ணப்பதாரர் ஒப்பந்தம் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். 2 மற்றும் 5 வருட காலத்திற்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
இதற்காக நடத்தப்படும் தேர்வில் வெற்றி பெறுவோர் சென்னையில் உள்ள சிப்காட் லிமிடெட்டில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த பணிக்கு ஆண்டு வருமானமாக ரூ 18 லட்சம் வழங்கப்படும்.
விழிப்புடன் இருங்கள்.. இந்திய ரயில்வே அமைச்சகம் வேலை தேடும் இளைஞர்களுக்கு முக்கிய அலார்ட்!
மாதச் சம்பளமாக ரூ 1.50 லட்சம் வழங்கப்படும். இந்த பணிக்கு சார்டர்ட் அக்கவுண்டன்ட் படித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 35 க்குள் இருக்க வேண்டும். குறைந்தது 5 வருட அனுபவம் இருக்க வேண்டும்.
மேற்கண்ட தகுதிகள் உடையவர்கள் தங்கள் விண்ணப்பங்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். மேலும் விவரங்களுக்கு sipcot.tn.gov.in என்ற வலைதளத்தை பார்க்கலாம்.