கோவை , தூத்துக்குடி ,நாகர்கோவில் நாளை வேலைவாய்ப்பு முகாம்
சென்னை: கோவை தூத்துக்குடி நாகர்கோவில் நாளை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் ஜோதிமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (பிப். 5) நடைபெறுகிறது. இதில், எஸ்எஸ்எல்சி., பிளஸ் 2, பட்டப் படிப்பு, முதுநிலை பட்டப் படிப்பு, தொழிற்கல்வி, ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்கள் பங்கேற்கலாம். முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, தங்களுக்குத் தேவையான நபர்களை தேர்வு செய்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்மூலம் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை ( 5.2.2021) காலை 10.30 மணியளவில் தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. பல்வேறு முன்னணிதனியார் நிறுவனத்தினர் பங்கேற்கவுள்ளனர். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ,ஐடிஐ மற்றும் கணினி பயிற்சிகல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் கலந்துகொள்ளலாம். தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் செய்யப்பட்டால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு 6380089119 என்ற அலுவலக செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரி விக்கப்பட்டுள்ளது.
அவங்க எல்லாம் விவசாயிகள் இல்ல... கொளுத்திப்போட்ட கங்கனா... பதிவுகளை தூக்கிய ட்விட்டர்
நாகர்கோவில்
நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (5-ம் தேதி) காலை 10 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. 10-ம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ, கணினி பயிற்சி பெற்ற கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் கலந்துகொள்ளலாம். மேலும் அரசு வேலைக்கான போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் சேர்ந்து பயிலலாம். வாரந்தோறும் புதன்கிழமை நடத்தப்படும் மாதிரி தேர்வில் பங்கேற்கலாம் என, வேலைவாய்ப்பு அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.