கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் 159 காலி பணியிடங்கள்.. எவ்வளவு சம்பளம்.. எப்படி விண்ணப்பிப்பது?
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா உயர்நீதிமன்றம் 159 காலியிடங்களுக்கு தகுதியானவர்களை நியமிப்பதற்கான செயல்முறைகளை இன்று ( ஜனவரி 11) முதல் தொடங்குகிறது. விருப்பம் உள்ளவர்கள் . டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், சிஸ்டம் அனலிஸ்ட் (புரோகிராமிங்), சீனியர் புரோகிராமர் மற்றும் சிஸ்டம் மேனேஜர் பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
கொல்கத்தா உயர்நீதின்றத்தில் உள்ள மேற்கண்ட காலியிட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் ஜனவரி 27ம் தேதி கடைசி நாள் ஆகும். , இந்த நியமனங்கள் ஆரம்பத்தில் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் செய்யப்படும், பின்னர் படிப்படியாக நிரந்தரமாகப்படலாம்.
கொல்கத்தா உயர்நீதிமன்ற வேலைகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி:
விண்ணப்பங்களை ஆன்லைன் முறை மூலம் மட்டுமே சமர்ப்பிக்க முடியும்.
விண்ணப்பதாரர்கள் வேலை குறித்த லேட்டஸ்ட் அப்டேட் மற்றும் தகவல்களுக்கு www.calcuttahighcourt.gov.in என்ற வலைத்தளத்தின் மூலம் தவறாமல் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வதற்கு முன் விண்ணப்பதாரர்கள், 'பொது அறிவுறுத்தல்கள் / நிபந்தனைகள்' பகுதிகளை முழுமையாக படித்து பார்த்துவிடுங்கள்
சம்பள விகிதம்:
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்: நிலை -6 ரூ .22,700 முதல் ரூ .58,500
கணினி ஆய்வாளர் (புரோகிராமிங்): நிலை -16 ரூ .56,100 முதல் ரூ .1,44,300
மூத்த புரோகிராமர்: நிலை -17 ரூ .67,300 முதல் ரூ .1,73,200 வரை
கணினி மேலாளர்: நிலை -17 6,7,300 முதல் 1,73,200 வரை.