மத்திய அரசின் NALCO India நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா? அப்போ இதை படிங்க
சுரங்க அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அரசு பொதுத்துறை நிறுவனமான NALCO India நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது..
மத்திய அரசின் சுரங்க அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அரசு பொதுத்துறை நிறுவனம் NALCO India. அலுமினியம் தயாரிப்பில் நாட்டிலேயே மிகப் பெரிய நிறுவனமான NALCO, தற்போது காலியாக உள்ள Mining mate மற்றும் Foreman Mining பணியிடங்களை நிரப்பவுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலியாக உள்ள பணியிடங்கள்: Mining mate - 18, Foreman Mining - 8
கல்வித் தகுதி (Foreman Mining): சுரங்க பொறியியல் (Mining engineering) படப்பிரியவள் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதேபோல அரசு அனுமதி பெற்ற நிறுவனத்திடம் இருந்து Mining Foreman Certificateஐ பெற்றிருக்க வேண்டும்.
கல்வித் தகுதி (Mining mate): 12ஆம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம்: Foreman Mining பணியிடத்திற்கு ரூ. 36,500 முதல் ரூ.37,900 வரை; Mining mate பணியிடத்திற்கு ரூ.29,500 முதல் ரூ. 34,000 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை : விரும்பும் பணிகளுக்கான விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.nalcoindia.com என்ற தளத்திலிருந்து விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதை பிரிண்ட் அவுட் எடுத்துச் செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்துக் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: "Recruitment Cell, Mine & Refinery Complex, National Aluminium Company, Limited, Damanjodi, Koraput - 763 008, Odisha"
கடைசி தேதி: ஆன்லைன் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யக் கடைசி நாள் பிப்ரவரி 28. சான்றிதழ்களை இணைத்து அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் மேலே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்குச் சென்று சேர வேண்டும்.
கூடுதல் தகவல்களுக்கு