சென்னை புழல் சிறையில் வேலை.. மாதம் 72,000 சம்பளம்.. 8 ஆம் வகுப்பு முடித்திருந்தாலே விண்ணப்பிக்கலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை புழல் மத்திய சிறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாதம் ரூ. 72,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வித்தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

சென்னை அருகே புழல் மத்திய சிறை உள்ளது. 2006 ஆம் ஆண்டு இந்த புழல் மத்திய சிறை திறக்கப்பட்டது. புழல் சிறையில் காவல் பணிகளை தவிர இதர சில பணிகளுக்கு நேரடி நியமனம் நடைபெறுகிறது. காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

job Chennai Employment

அந்த வகையில் தற்போது புழல் சிறையில் காலியாக இருக்கும் சமையலர், டிரைவர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டார். இந்த பணியிடங்களுக்கு தேவையான கல்வி தகுதி.. எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்களை இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள்: சமையலர், லாரி டிரைவர், நெசவு போதகர் என மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்களுக்கு பணியின் தன்மைக்கேற்ப தகுதிகள் மாறுபடும்.

கல்வித் தகுதி: கல்வி தகுதியை பொறுத்தவரை குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டிரைவர் பணிக்கு 8 ஆம் வகுப்பு கல்வி தகுதியுடன் கனரக வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது ஒரு வருடம் பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சமையலர் பணிக்கு, சமையலர் பணியில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். நெசவு போதகர் பணிக்கு தமிழ்நாடு அரசு தேர்வுத்துறையினரால் கைத்தறி நெசவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை சமையலர் பணியிடத்தை தவிர இதர இரு பணியிடங்களுக்கும் 18 - 32 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். சமையலர் பணிக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு 34 ஆகும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 2 ஆண்டுகளும், எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு 5 வருடங்களும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் எவ்வளவு?: சம்பளத்தை பொருத்தவரை சமையலர் பணிக்கு ரூ.15,900 - 55,500 வரையும், டிரைவர், நெசவு பணியிடங்களுக்கு ரூ.19,500- 71,900 வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?: இந்த பணியிடங்களுக்கு ஆப்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். அதாவது தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் 13.09.2024 மாலை 6 மணிக்குள் சென்றடைய வேண்டும். அதற்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
சிறை கண்காணிப்பாளர்
மத்திய சிறை-1, புழல்
சென்னை - 66
தொலைபேசி எண்: 044-26590615.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு முன் தேர்வு அறிவிப்பினை ஒருமுறை படித்து கொள்ளவும். தேர்வு அறிவிப்பை படிக்க இந்த லிங்கை கிளிக் https://chennai.nic.in/applications-are-invited-from-eligible-candidates-for-the-following-posts-in-central-prison-1-puzhal-chennai-district/ செய்யவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+