மத்திய பாதுகாப்புப் படையில் வேலை.. 1412 தலைமை காவலர் பணிகள்
டெல்லி: மத்திய பாதுகாப்பு படையில் 1412 தலைமை காவலர் பணியிடங்களுக்கு தகுதி உள்ளவர்கள் வரும் மார்ச் 6ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் குறைந்தது நான்கு ஆண்டுகள் பாதுகாப்பு படையில் பணியாற்றிக் கொண்டு இருக்க வேண்டும். அவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டுள்ளது.
பணி: தலைமைக் காவலர் - Head Constable (General Duty) (ஆண்கள் 1331- பெண்கள் 81) : 1412 பணியிடங்கள்
ஊதியம்: 7 வது ஊதிய கமிஷன் பரிது மாதம் ரூ. 25,500 - ரூ.81,100 கிடைக்கும் அத்துடன் மற்ற டிஏ , ஹெச்ஆர் ,சிசிசஏ போன்ற இதர படிகளும் உண்டு.
விண்ணப்பிக்க என்ன தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்று குறைந்தது 4 ஆண்டுகள் பாதுகாப்புப் படையில் பணிபுரிந்திருக்க வேண்டும். பாதுகாப்பு படையில் பொதுப்பணி, பக்லர், மாலி, பெயிண்டர் போன்ற பணிகளில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி நிலவரப்படி 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: ஏற்கெனவே பணிபுரியும் அலுவலகத்தின் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://crpf.gov.in/writereaddata/Portal/Recruitment_Advertise/ADVERTISE/1_189_1_Notification_of_HCGD-LDCE_EXAMINATION_2019.pdf என்ற முகவரியில் அறியலாம்.
தேர்வு நடைபெறும் தேதி: 19.04.2020
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 06.03.2020