வேலையில்லையா.. மத்திய அரசு தொழில் பழகுனர் பயிற்சியில் சேருங்கள்.. செம்ம சம்பளம்! .
டெல்லி: மத்திய அரசு, பல்வேறு துறையில் தொழில் பழகுனர் பயிற்சி அளிக்கிறது. பயிற்சியில் சேரும் போதே மாதம் 11500 முதல் 19200 வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு நிறுவனமான நவீன கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டு நிறுவனத்தில் (டி.எஸ்.ஆர்.வி.எஸ்) டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், வெப் டிசைனர், கண்டெண்ட் ரைட்டர், ஆபீஸ் அசிஸ்டெண்ட், கம்ப்யூட்டர் நெட் ஒர்க்கிங் டெக்னீசியன் போன்றவற்றில் 443 இடங்கள் அப்ரண்டீஸ் அடிப்படையில் நிரப்பப்ட உள்ளது.
18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம்.
12ம் வகுப்பு , பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டர் சார்ந்த பயிற்சி படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பயிற்சின் போது மாதம் 11500 முதல் 19500 ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. எழுத்து தேர்வ மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி 25.02.2020. மேலும் விரிவான விவரங்களை https://www.dsrvs.com/recruit/index.php?welcome/view_advt/1 என்ற இணையதளத்தில் காணலாம். அதில் விண்ணப்பிக்கவும் முடியும்
விண்ணப்ப கட்டணம் பொது மற்றுமம் ஒபிசி பிரிவினருக்கு 550 ரூபாய், எஸ்சிஎஸ்டி பிரிவினருக்கு 400 ரூபாய், ஊனமுற்றோருக்கும் 400 ரூபாய்.
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், வெப் டிசைனர், கண்டெண்ட் ரைட்டர், ஆபீஸ் அசிஸ்டெண்ட், கம்ப்யூட்டர் நெட் ஒர்க்கிங் டெக்னீசியன் உள்ளிட்ட அனைத்து பணி பயிற்சிக்கும் 1986 பிப்ரவரி 20ம் தேதிக்கு பின்னர் பிறந்தவர்களும் 2003 பிப்ரவரி 20க்கு முன்பு பிறந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.