சூப்பர் சம்பளம்.. திருவண்ணாமலையில் அரசு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி நாள்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும உள்ளவர்கள் வரும் 8ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் என்ன வேலை, என்ன கல்வி தகுதி. வயது வரம்பு, என்ன சம்பளம் என்பதை இப்போது பார்ப்போம்.
வேலை தரும் நிறுவனம் : திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
மொத்த காலியிடங்கள் எண்ணிண்கை : 80
வேலை செய்யும் இடம்: திருவண்ணாமலை
வேலைவாய்ப்பு எப்படிப்பட்டது: தமிழக அரசு வேலை
பணியின் பெயர்: Overseer/Junior Drafting Officer
என்ன படித்திருக்க வேண்டும்: Dipolma (Civil) முடித்திருக்க வேண்டும்.
எத்தனை வயது வரை விண்ணப்பிக்கலாம்: 35 வயது வரை இருக்கலாம்.
மாதம் எவ்வளவு ஊதியம் கிடைக்கும் : ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம் உண்டா: விண்ணப்பிக்க எந்த கட்டணமும் கிடையாது
விண்ணப்பிக்கும் நபர்கள் எப்படி தேர்வு செய்யப்படுவார்கள் : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 08.12.2020. ( நாளை மறுநாள் கடைசி தேதியாகும்.) எப்படி விண்ணப்பிப்பது என்பதை கீழே உள்ள பிடிஎப்பில் பாருஙகள்.