சென்னை மாநகராட்சியில் 10,000 பேருக்கு காத்திருக்கும் வேலை.. கடைசி தேதி & கல்வித்தகுதி விவரம்
சென்னை: 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு படித்தவர்களுக்கு சென்னை மாநகராட்சியில் 10 ஆயிரம் வேலைகள் காத்திருக்கிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கான பணியாளர்கள் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தூய்மைபணியாளர்கள், உதவியாளர்கள், இலகு மற்றும் கனரக வாகன ஓட்டுநர்களுக்கும், பேட்டரி ரிக்ஷா ஆபரேட்டர் வேலைகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இதற்காக 18.11.2020 முதல் நடந்து வரும் நேர்முகத்தேர்வு வரும் 28.11.2020 அன்றுடன் நிறைவு பெறுகிறது..
சென்னை தியாகராய நகர் பார்த்தசாரதிபுரம் சோமசுந்தரபுரம் விளையாட்டு மைதானத்தில் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை நேர்முகத்தேர்வு நடைபெறுகிறது.
நேர்முகத்தேர்வுக்கு 8,10,12 வகுப்பு படித்தவர்கள் ஆதார் கார்டு, பான்கார்டு, வங்கி கணக்கு, பள்ளி சான்றிதழ் மற்றும் நான்கு புகைப்படங்களுடன் வரலாம்.
வேலைவாய்ப்பு குறித்த மேலும் விபரங்களுக்கு, 7338888166, 7338882241 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
கல்யாணத்துக்கு போவதை விட.. உசுருதான் முக்கியம்.. பாத்து சூதானமா இருங்க.. பிரதீப் கெளர் அட்வைஸ்
வேலை தரும் நிறுவனம்: சென்னை மாநகராட்சி
கல்வி தகுதி 8th. 10, 12th
பணியின் பெயர்கள்: சுகாதார பணியாளர்கள்/ உதவியாளர்கள், டிரைவர்கள் மற்றும் பேட்டரி ரிக்ஷா ஆப்ரேட்டர்கள்
மொத்த பணியிடங்கள்: 10,000
தேர்வு முறை: நேர்முகத்தேர்வு
தேர்வில் பங்கேற்க கடைசி நாள் 28/11/2020 (நேர்முகத்தேர்வு நவம்பர் 18ம் தேதி தொடங்கியது, நவ 28 வரை நடக்க உள்ளது
நேர்முகத்தேர்வு நடைபெறும் நேரம்: காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்: தி நகர் பார்த்தசாரதிபுரம் சோமசுந்தர விளையாட்டு மைதானம்