திருச்செந்தூர் கோயிலில் பணியாற்ற அரிய வாய்ப்பு.. இந்து அறநிலையத் துறை வெளியிட்ட வேகன்சி லிஸ்ட்!
சென்னை: தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பணியாற்ற இந்து சமய அறநிலையத் துறை சார்பில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் வட்டத்தில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள அர்ச்சகர், அலுவலக உதவியாளர், தட்டச்சர், இளநிலை மின் பொறியாளர், பிளம்பர் மற்றும் பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அது போல் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள அர்ச்சகர், அலுவலக உதவியாளர், தட்டச்சர், இளநிலை மின் பொறியாளர், பிளம்பர் மற்றும் பல பதவிகளுக்கு காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி பிப்ரவரி 24 ஆம் தேதி. இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு படி விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வு ஆகிய அடிப்படை முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மொத்தமுள்ள 63 இடங்களில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு 36 இடங்களும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 27 காலிப்பணியிடங்களும் உள்ளன. மேலும் விவரங்களுக்கு tnhrce.gov.in பார்வையிடலாம்.
வயது வரம்பு 18 வயது முதல் 35 வயது வரை இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருச்செந்தூர்- 628215 என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும்.
அது போல் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், இராமேஸ்வரம் 623 526.