கிருஷ்ணகிரியில் வேலை.. ஊரக வளர்ச்சித் துறையில் பணி.. 1 லட்சம் வரை சம்பளம்
கிருஷ்ணகிரி: தமிழக ஊரக வளர்ச்சித் துறை புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மொத்தம் 33 காலிப்பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான கடைசி தேதி ஜனவரி மாதம் 21 ஆகும்.
கிருஷ்ணகிரியில் தமிழக ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பணிப்பார்வையாளர்/ இளநிலை வரை தொழில் அலுவலர் பணிகள் காலியாக உள்ளன.
இதற்கு தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கு மொத்தம் 33 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 21.01.2021 அன்றுக்குள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட அஞ்சல் முகவரிக்கு தங்களுடைய விண்ணப்பங்களை அனுப்பி வைக்கவும்.
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு 2021 அறிவிப்புபடி விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைகளில் பணியமர்த்தப்படுவார்கள்.
மாத ஊதியமாக ரூ 35,400 முதல் 1,12,400 வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் டிப்ளமோ இன் சிவில் என்ஜீனியரிங் காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 35 க்குள் இருக்க வேண்டும்.