நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் 309 டெக்னீசியன் பணியிடங்கள்!
சென்னை: தமிழகத்தின் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டும் வரும் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னீசியன் மற்றும் பட்டதாரி அப்ரண்டீஸ் பயிற்சிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 390
கல்வித்தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் சம்மந்தப்பட்ட துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: டிப்ளமோ மற்றும் டிகிரி படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பித்த பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
துணை நிர்வாக மேலாளர்,
வேலைவாய்ப்பு மேலாண்மை பிரிவு,
நெய்வேலி - 607 803
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.12.2014
விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 03.01.2015
மேலும் விண்ணப்பதாரர்களின் சந்தேதகங்கள் முழுமையான விவரங்களை http://jobs.oneindia.com/search/ என்ற இணையதளத்தின் மூலம் அறியலாம்.
மேலும், இதுபோன்ற பல்வேறு வேலைவாய்ப்பு செய்திகளுக்கு jobs.oneindia.com என்ற இணையதளத்தினை பார்வையிடுங்கள்.