என்எல்சி நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு ரூ.1,60,000 வரை சம்பளத்தில் வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க
நெய்வேலி: என்என்எல்சி என அழைக்கப்டும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 259 கிராஜுவேட் எக்சிகியூட்டிவ் டிரெய்னி பணியிடங்களுக்கு விருப்பமும் , தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
மொத்த பணியிடங்கள்: 259
பணியின் பெயர் கிராஜுவேட் எக்சிகியூட்டிவ் டிரெய்னி
என்ன படித்திருக்க வேண்டும் : மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன், கண்ட்ரோல் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேசன், கம்ப்யூட்டர், மைனிங் போன்ற பிரிவுகளில் பிஇ அல்லது பிடெக் படித்தவர்கள், ஜியாலஜி. நிதி, எச்ஆர் போன்ற பிரிவுகளில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவர்.
எத்தனை வயது வரை விண்ணப்பிக்கலாம்:
வயதுவரம்பு: 01.03.2020 தேதியின்படி பொதுப்பிரிவினர் 30க்குள் இருக்க வேண்டும். ஒபிசி பிரிவினர் 33 வயது வரையும், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் 35 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் எவ்வளவு: ரூ.50000 முதல் ரூ.160000 (e -2 grade). பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பிறகு சம்பளம் ரூ.60,000 முதல் ரூ.180000 கிடைக்கும்.
வேலைக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் என்.எல்.சி.ஐ.எல் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள எந்தவொரு யூனிட் / ஏரியா / இடத்திற்கு அல்லது எந்தவொரு கூட்டுத் தொழில் / அசோசியேட் / துணை நிறுவனத்திற்கும் அனுப்பப்படுவார்கள்.
எப்படி விண்ணப்பிப்பது: www.nlcindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்தல் வேண்டும். பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.854. மற்ற பிரிவினர் ரூ.354 கட்டணமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
ஆன்லைனில் விண்ணப்பத்தை வரும் மார்ச் 18 ஆம் தேதி முதல் ஏப்ரல் 17 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். மேலும் முழுமையான விவரங்களை கீழே உள்ள பிடிஎப்பில் அறியலாம்.