சிறை அலுவலர் பதவி.. ஒருங்கிணைந்த பொறியியல் பணி.. தற்காலிக தேர்வர்கள் பட்டியல் ரிலீஸ்!
சிறை அலுவலர் பதவி மற்றும் ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கு தேர்வான, தற்காலிக தேர்வர்கள் பட்டியலை டிஎஸ்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் க.நந்தகுமார் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், "சிறை அலுவலர் பதவி மற்றும் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் உள்ள பதவிகளுக்கான (2019ம் ஆண்டு) முறையே இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் 9ம் தேதி (நாளை) முதல் 16ம் தேதி மாலை 5.30 மணி வரை அரசு வேலை நாட்களில் தங்களது மூலச்சான்றிதழ்களை அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக ஸ்கேன் செய்து தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களை குறிப்பிட்ட நாட்களுக்குள் பதிவேற்றம் செய்யவில்லை எனில், அந்த விண்ணப்பதாரர்களுக்கு இந்த தேர்வில் கலந்துகொள்ள விருப்பமில்லை என கருதி, அவர்களது விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.
விமான நிலைய ஆணையத்தில் பணி.. மாதம் பொறந்தா ரூ ஒன்றரை லட்சம் வரை ஊதியம்!
சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியல் மற்றும் பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணங்கள் குறித்த குறிப்பாணை மற்றும் அரசு இ-சேவை மையங்களின் பட்டியல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.