பத்தாம் வகுப்பு தகுதிக்கு இந்திய ரிசர்வ் வங்கியில் சூப்பர் வேலை
மும்பை: இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 241 பாதுகாவலர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 12.02.2021
பணியின் பெயர்: செக்யூரிட்டி கார்டு
காலியிடங்கள்: 241 (இதில் சென்னையில் மட்டும் 22, பெங்களூருவில் 12, அதிகபட்சமாக மும்பையில் 84 காலி பணியிடங்கள்)
கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 25 வயதிற்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினர் 28 வயது வரையிலும் , எஸ்சி, எஸ்டி பிரிவினர் 30 வயது வரையிலும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.02.2021
மேலும் அனுபவம், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய செய்தியில் இணைக்கப்பட்டுள்ள பிடிஎப் பைலில் அறியலாம்.