ரிசர்வ் வங்கியில் மாசம் ரூ 10 ஆயிரத்துக்கு வேலை.. 241 காலிப்பணியிடங்கள்
டெல்லி: இந்திய ரிசர்வ் வங்கியில் புதிய வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
செக்யூரிட்டி கார்ட்ஸ் பணிக்கு 241 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த 241 இல் சென்னையில் மட்டும் 22 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்காக விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி 12 ஆம் தேதி ஆகும்.
ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்புப்படி விண்ணப்பதாரர்கள் Online Test/ Physical Test போன்ற தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றிப்பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்குவேனாலும் பணியமர்த்தப்படுவார்கள்.
தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ 10,940 ஊதியமாக வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு www.rbi.org.in என்ற இணையதளத்தை பார்க்கலாம். இந்த பணிக்கு கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சியாகும். விண்ணப்பதாரர்களின் வயது 25 க்குள் இருக்க வேண்டும்.
ஆன்லைன் தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். 50 ரூபாய் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.