சென்னை உரத் தொழிற்சாலையில் 45 காலியிடங்கள் இருக்கு... லேட் பண்ணாதீங்க... உடனே அப்ளை பண்ணுங்க!
சென்னை: சென்னையில் மணலியில் உள்ள பொதுத்துறை நிறுவனமான madras fertilizers limited என்ற உரத் தொழிற்சாலையில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு 45 காலியிடங்கள் உள்ளன.
பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடிதத்த தகுதியும், திறமையும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
சென்னையில் மணலியில் உள்ள பொதுத்துறை நிறுவனமான madras fertilizers limited என்ற உரத் தொழிற்சாலையில் தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 45 காலியிடங்கள் உள்ளன.
பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்த தகுதியும், திறமையும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பயிற்சியின்போது ஊக்கத்தொகையாக மாதம் ரூ.3,542 வழங்கப்படும்.
http://boat-srp.com அல்லது www.mhrdnats.gov.in என்ற வலைதள முகவரிக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 24.03.2021 ஆகும். எந்தெந்த பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன? என்பது உள்ளிட்ட மேலும் விவரங்களை http://boat-srp.com என்ற இணையதளதத்துக்கு சென்று அறிந்து கொள்ளலாம்.