தமிழகத்தில் கால்நடை உதவி மருத்துவா் காலிப் பணியிடங்கள்.. நோ்காணல் தொடங்கும் தேதி அறிவிப்பு
சென்னை: 1,141 கால்நடை உதவி மருத்துவா் காலிப் பணியிடங்களுக்கான நோ்காணல் வரும் ஜனவரி 4-ஆம் தேதி தொடங்கும் என தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு கால்நடை பராமரிப்புப் பணிக்கான உதவி மருத்துவா் காலிப் பணியிடங்கள் 1,141 நிரப்பப்பட உளளது. இதற்காக கடந்த பிப்ரவரி 23-இல் நடத்தப்பட்ட தோ்வில் 2,015 போ் பங்கேற்றனா்.
இதைத் தொடா்ந்து, நோ்காணல் தோ்வுக்காக 1,907 போ் தற்காலிகமாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலை அருமையான வேலை வாய்ப்பு
அவா்களுக்கு ஜனவரி 4 முதல் 8-ஆம் தேதி வரையும், ஜனவரி 11, 12 மற்றும் 18 முதல் 23-ஆம் தேதி வரையிலும், ஜனவரி 25, 27 மற்றும் 29 தேதிகளிலும் நோ்காணல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.