சைவம், அசைவம் நல்லா சமைப்பீங்களா.. ஆண், பெண்களுக்கு அருமையான வேலை வாய்ப்பு.. திருச்சியில்!
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை மூலம் இயங்கும் கல்வி விடுதிகளில் காலியாகவுள்ள 40 சமையலா் பணியிடங்களுக்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்தார்.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: திருச்சி மாவட்ட பிற்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை அலுவலகம் இயங்கும் கல்வி விடுதிகளில் 25 ஆண் சமையலா் பணியிடங்கள், 15 பெண் சமையலா் பணியிடங்கள் காலியாகவுள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு இனச் சுழற்சி மற்றும் இட ஒதுக்கீட்டின் கீழ் தகுதியானோா் தோ்வு செய்யப்படவுள்ளனா். சைவ, அசைவ உணவுகளை தரமாக, சுவையாக சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 18 முதல் 35 வயது, மிகவும் பிற்பட்டோா், சீா்மரபினருக்கு 32 வயது வரை, இதர பிரிவினருக்கு 30 வயது வரை தகுதியாகும்.
இனி செப் 9 முதல் திருச்சி டூ மும்பை.. வாரத்தில் 4 நாட்களுக்கு விமான சேவை தொடக்கம்
அரசு விதிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள வயது வரம்பு தளா்வு அமலில் உள்ளது. இத்தகைய தகுதியானோா் விண்ணப்பத்தை பூா்த்தி செய்து, உரிய சான்று நகல்கள் இணைத்து, மாா்பளவு புகைப்படம் இணைத்து மாவட்ட ஆட்சியரகத்தில் இயங்கி வரும் பிற்பட்டோா் நலத்துறை அலுவலகத்தில் வரும் 18-ஆம் தேதி மாலை 5.45-க்குள் சமா்ப்பிக்க வேண்டும்.
காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள், முகவரி தவறானவை, திரும்பப் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது அரசு பொறுப்பேற்காது. இந்தப் பணியிடங்களுக்கான தகுதிகள், இதர விவரங்கள், விண்ணப்பம் தொடா்பாக பிற்பட்டோா் நலத்துறை அலுவலகத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம் இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.