சர்க்கரை கேட்ட பாப்பாவும், திகைத்துப்போன பக்கத்து வீட்டு கவிதாவும்
சென்னை: மதியம் சாப்பிட்டதும் உங்களுக்கு கண்ணை கட்ட ஆரம்பிச்சிருக்கும். சட்டுன்னு இந்த ரெண்டு ஜோக்க படிச்சிட்டு உற்சாகமா வேலையை பாருங்க பாஸு.
ஒரு பந்தையத்திற்காக, பேய் பங்களாவிற்குள் சோமுவும் ராமுவும் போனார்கள். ராமு பயந்து நடுங்கிக்கொண்டே இருக்க, சோமுவோ ரொம்ப ஜாலியாக வந்தான்.
இதை பார்த்த ராமு ஆச்சரியப்பட்டான். ஏன்டா, உனக்கு இந்த பேய், பிசாசெல்லாம் பயமே கிடையாதா என்று கேட்டே விட்டான். அதற்கு சோமு, "நான் ஒரு பொண்ண லவ் பண்ணினேன், பேய் பயம் போச்சு.. அதே பொண்ண கல்யாணம் பண்ணினேன், பிசாசு பயமும் போயிடுச்சி. இப்போ பாரு பயமே இல்லை" என்று சொன்னானே பார்க்கலாம். ராமு பயத்தை மறந்துவிட்டு, சத்தமாக சிரித்துவிட்டான்.
குட்டி பாப்பா, பக்கத்து வீட்டு கவிதா வீட்டு கதவை தட்டியது. கதவை திறந்த கவிதா, "என்ன செல்லம் வேணும் உனக்கு" என்று ஆசையோடு கேட்டார். "எங்க அம்மா.. ஒரு கப் சர்க்கரை வாங்கிட்டு வரச் சொன்னாங்க ஆன்ட்டி" என்றது குழந்தை.
சரிம்மா வேற என்ன சொன்னாங்க என கவிதா கேட்க, "அந்த கிறுக்கி தரலைன்னா, எதிர்வீட்டு ஆன்டிகிட்ட வாங்கிட்டு வான்னு சொன்னாங்க" என்று பட்டென போட்டு உடைத்தது பாப்பா. கடுகடுத்துப்போனது கவிதா முகம். அப்புறம் சர்க்கரையா கொடுத்திருப்பார்கள்.. அத நீங்களே யோசிச்சிக்கீங்க.