ஆபீசில் லீவு போட அற்புத ஐடியா!
ஒரு ஆபீசில், சக ஊழியர்கள் ரமேஷும், உஷாவும் பேசிக் கொண்டிருந்தனர்.
உஷா: இன்னைக்கு வேலை செய்யவே பிடிக்கலை, நான் லீவு போடலாமுன்னு இருக்கிறேன்.
ரமேஷ்: அது எப்படி திடீருன்னு லீவு எடுக்க முடியும்.
உஷா: நான் என்ன பண்றேன்னு மட்டும் பாரு. சிரித்து காட்டி கொடுத்துவிடாதே.
இப்படி சொல்லிவிட்டு, ஆபீஸ் பாஸ் வரும் நேரமாக பார்த்து, சுவற்றில் ஏறி கீழே குனிந்தபடி
தொங்கிக் கொண்டிருந்தார் உஷா.
பாஸ் பரமேஸ்வரன்: உஷா நீங்க என்ன பண்றீங்க. ஏன் இப்படி சுவத்துல ஏறி நிக்கிறீங்க.
உஷா: நான் இப்போ உஷா இல்லை. ஆபீஸ் பல்பு. அதுதான் எரிந்து கொண்டுள்ளேன்.
பாஸ் பரமேஸ்வரன்: (மனசுக்குள்) இந்த பொண்ணு லூசாகிடுச்சோ.. (சத்தமாக) நீங்க ரொம்ப
டையர்டா இருப்பீங்க போல. லீவு எடுத்துட்டு வீட்டுக்கு போங்க.
ரமேஷ்: நானும் அப்போ கிளம்புறேன் சார்.
பாஸ் பரமேஸ்வரன்: யோவ் உனக்கு என்னய்யா வந்துச்சி..
ரமேஷ் : பல்பு இல்லாத இடத்தில் இருட்டிலெல்லாம் என்னால் வேலை செய்ய முடியாது சார். நான் கிளம்புறேன்.
பாஸ் பரமேஸ்வரன்: !!!