"OXFORD"... நடிகர் வடிவேலும் பார்த்திபனும் சந்தித்த போது..
வடிவேலு: வணக்கம்னே.. நல்ல வாத்யார் மாதிரி வந்தீங்க..
பார்த்திபன்: வாத்யார்னா ஒருத்தர்தான் அவரு மெரீனா பீச்சுல தூங்கிகிட்டு இருக்காரு...
வடிவேலு: அண்ணா.. அப்படி எல்லாம் சொல்லலைன்னா...
பார்த்திபன்: வாத்யாருக்கு முன்னாடியே அண்ணா தூங்கப் போய்ட்டாரு.. இப்ப உன் பிரச்சனை என்ன?
வடிவேலு: பக்கத்து வீட்டு பையன் ஒரு கேள்வியைக் கேட்டு தூக்கத்தை கெடுத்துட்டாங்க..
பார்த்திபன் : என்ன கேள்வி கேட்டான்..
வடிவேலு: அதாவதுண்ணே. இந்த ford கார் இருக்குல்ல..
பார்த்திபன்: என்கிட்ட ஆடி கார்தான் இருக்கு..
வடிவேலு: அய்யோ... பொத்தாம் பொதுவா சொன்னேன்.. ford ன்னா கார் ஓகே...அப்ப oxfordன்னா என்னானு கேட்டாண்ணே
பார்த்திபன்: நல்ல கேள்வியைத்தான் கேட்டிருக்கான்.. ஆனா உன் கிட்ட கேட்டதுதான் தப்பு..
வடிவேலு: oxford ன்னா லண்டன்ல இருக்கிற யுனிவர்சிட்டிதானே..
பார்த்திபன்: நீ சொன்ன பதில் சரிதான்.. ஆனா தப்பு
வடிவேலு: அது எப்படி சரி? அது எப்படி தப்பு?
பார்த்திபன்: ox-ன்னா காளைன்னு அர்த்தம்.. அதனால oxforன்னா காளைமாட்டு வண்டின்னு பேரு
வடிவேலு: அட நாதாரிகளா....