காலையிலேயே டென்ஷனா.. "குபீர்"னு சிரிச்சுட்டு "கபால்"னு வேலை பார்க்கலாம் வாங்க!
சென்னை: லாக்டவுன் முடிந்து அன்லாக் பண்ண ஆரம்பிச்சாச்சு... இன்னும் என்ன டென்ஷன்.. வாங்க வாட்ஸ் ஆப்பில் வந்த நாலு ஜோக்கை நறுக்குன்னு படிச்சுட்டு நச்சுன்னு வேலையைப் பார்க்கலாம்.. ஓடியாங்க ஓடியாங்க!
கோபி : மாப்பிள்ளைக்கு ரொம்ப குறும்பு?
ரமேஷ் : ஏன்.. என்னாச்சு?
கோபி : அறுபதாம் கல்யாணத்துலயும் அதே பொண்ணுக்குத்தான் தாலி கட்டணுமான்னு கேக்குறாரு!
ரமேஷ் : அடக் கொடுமையே!
--
தினேஷ் : வித்தியாசமா இருக்கட்டுமேன்னு, போர்டுக்கு பதிலா டீ-சர்ட்ல 'டு லெட்"-னு எழுதி வாசல்ல தொங்கவிட்டது தப்பா போச்சு...
ரவி : ஏன், என்னாச்சு?
தினேஷ் : எவனோ ஒருத்தன் அந்த டீ-சர்ட்டை எடுத்துக்கிட்டு, அதுக்கு பதிலா அவனோட அழுக்கு பனியன்ல 'thanks"-னு எழுதி மாட்டிட்டு போயிட்டான்.
ரவி : அடப் பிக்காளிப் பயலே!
--
பயணி : யோவ் டிரைவர்! பஸ்ஸை நிறுத்து... ஒருத்தர் பஸ்ல இருந்து தவறி விழுந்துட்டாரு.
டிரைவர் : சும்மா இருய்யா! கண்ட இடத்துல பஸ்ஸை நிறுத்துனா கண்டக்டர் என்னை திட்டுவாரு.
பயணி : யோவ்! விழுந்ததே கண்டக்டர்தான்...
டிரைவர் : அடப் பாவி!
--
ஆசிரியர் : உன்கிட்ட 3 பிஸ்கெட் இருக்கு... அப்போ உன்ன பாக்க உன் friends 3 பேர் வராங்க... நீ என்ன பண்ணுவ...?
மாணவன் : பிஸ்கெட்ட மறைச்சு வெச்சுருவேன் சார்...
ஆசிரியர் : அடேய் டேய்!
--
மனைவி: அழகான மனைவியுடன் இருப்பவன் அதிர்ஷ்டசாலியா. அல்லது அறிவான மனைவியுடன் இருப்பவன் அதிர்ஷ்டசாலியான்னு பட்டிமன்றம் நடந்துச்சே.. எந்த அணிங்க ஜெயிச்சுது?
கணவன்: அதுவா.. திருமணம் ஆகாதவனே பெரும் அதிர்ஷ்டசாலின்னு நடுவர் தீர்ப்பைக் கொடுத்துட்டு போயிட்டார்.
மனைவி: ம்க்கும்.