ஐபிஎல்லுக்காக கல்யாணத்தையே விட்டுக் கொடுப்பதா?... வாட்ஸ் ஆப்பில் படித்து ரசித்தது
சென்னை: என்னுடைய நண்பர் ஒருவர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நேரில் பார்ப்பதற்காக டிக்கெட் வாங்கியுள்ளார். பிரச்சினை என்னென்னா! மேட்ச் நடக்கும் நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று அவருக்கு திருமணமாம். நிச்சயம் ஆவதற்கு முன்னரே டிக்கெட்டுகளை வாங்கியதால் அவருக்கு திடீரென யோசனை வந்தது.
என்ன செய்திருப்பார்... டிக்கெட்டை வேறு யாருக்காவது கொடுக்க யோசித்திருப்பார் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.
அதாவது கல்யாணம் செய்து கொள்ள யாருக்கேனும் ஆர்வம் இருந்தால் அவரிடம் சொல்லுங்கள் என்கிறார். அந்தளவுக்கு கிரிக்கெட் பைத்தியங்கள் அதிகரித்துவிட்டன. அதான் சம்மர் சீசனில் கிரிக்கெட் வேண்டாம் என்றால் கேட்கிறார்களா?
மற்றொன்று
இந்த கோடைக்கு தமிழகத்தில் அதுவும் குறைந்த செலவில் சென்று வரக் கூடிய கூலான இடங்கள்...
இதோ
ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்
ஆக்ஸிஸ் பேங்க் ஏடிஎம்
ஐடிபிஐ ஏடிஎம்
ஹெச்டிஎஃப்சி ஏடிஎம்
இவைகள் தான்... பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி ஏடிஎம்களை முழுவதுமாக புறக்கணியுங்கள். ஏனெனில் அங்கு ஏசி சரியாக வேலை செய்யாது.
ஹி.. ஹி... ஹி... கடுப்பாக உள்ளதா எனக்கு அப்படிதான் இருந்தது.