ஆஹா எம்புட்டு நாளாச்சு, ஒயின்ஷாப் வாசலில் விழுந்து கும்பிட்டு சரக்கு வாங்கப் போன பெண்
சென்னை: மதுபான கடைகள் திறந்ததை அடுத்து ஒரு பெண் அந்த கடையில் விழுந்து கும்பிட்டு சரக்கு வாங்க சென்றது பெரும் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் உள்ளிட்ட அனைத்துக் கடைகளும் கொரோனா லாக்டவுனால் மூடப்பட்டன. இதனால் கடந்த 40 நாட்களுக்கு மேலாக மதுகிடைக்காமல் குடிமகன்கள் தவித்து வந்தனர். எனினும் அவர்களால் 40 நாட்களுக்கு குடிக்காமல் இருக்க முடிந்ததை பார்த்து அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் நேற்று முதல் நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் சில கட்டுப்பாடுகளுடன் மதுபானக் கடைகளை திறக்க மத்திய அரசு அறிவுறுத்தியது.
டிரென்டிங்
இதையடுத்து நேற்று முதல் உத்தரப்பிரதேசம், டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மதுபான கடைகள் திறக்கப்பட்டன. கடைத் திறப்பதற்கு முன்னதாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபான பாட்டில்களை வாங்கிச் சென்றனர். நேற்று மட்டும் ரூ 100 கோடி வருமானத்தை சில மாநிலங்கள் பெற்றன. தமிழகத்திலும் மதுக் கடைகள் நாளை மறுநாள் முதல் திறக்கப்படுகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து #மே7அழிவின்ஆரம்பம் என்ற ஹேஷ்டேக் டிரென்டிங்கில் உள்ளது. மதுபானம் தொடர்பான மீம்ஸ்கள் வாசகர்கள் பார்வைக்கு:
கல்லா கட்டிய டாஸ்மாக்
மற்ற துறைகளை காட்டிலும் முதல் நாளே 45 கோடி கல்லா கட்டியது.
மன்னன் படம்
டாஸ்மாக் கடைகள் மே 7 -ஆம் தேதி திறந்தால் மன்னன் படத்தில் வரும் காமெடி போல் மக்கள் முண்டியடித்துக் கொண்டு மதுவை வாங்குவர் என்கிறார் இந்த வலைஞர்.
|
இதுதான் நடக்கும்
மே 7-ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டால் இதுதான் நடக்கும் என்கிறார் இந்த வலைஞர்.
|
எம்புட்டு நாளாச்சு
ஆஹா.. எம்புட்டு நாளாச்சு.. ஒயின்ஷாப் வாசலில் விழுந்து கும்பிட்டு சரக்கு வாங்கப் போன பெண்!!