பொன்மேனி உருகுதே.. என் கலர் கருகுதே.. கலகலக்கும் "கத்திரி" மீம்ஸ்!
சென்னை: அடிக்கிற வெயிலுடன் அக்னி நட்சத்திரமும் சேர்ந்து கொண்டு தமிழ்நாட்டு மக்களை ஏகத்திற்கும் வாட்டி வதைத்து வருகிறது.
இதனால் காலை 9 மணிக்கே வெளியில் போகலாமா? வேண்டாமா? என்று தீவிரமாக யோசித்து செயல்புரியும் அளவுக்கு மக்களின் நிலை இருக்கிறது.
இந்த சூழ்நிலையிலும் அக்னி நட்சத்திரம்னா பயந்துருவோமா? என்று வழக்கம்போல நெட்டிசன்கள் தங்கள் கடமையை ஆற்றி வருகின்றனர்.
அதிலிருந்து ஒருசில மீம்ஸ்களை பார்க்கலாம்.
நெருப்புடா
கபாலி டீசரில் வரும் 'நெருப்புடா' என்ற வார்த்தையை வைத்து நடப்பு சூழ்நிலையை விளக்கியுள்ளனர்.
ஒரு மெல்லிசான கோடு
முன்பெல்லாம் சிக்னலுக்கு 10 அடி முன்னால் நிற்கும் வாகனங்கள், தற்போது வெயிலுக்குப் பயந்து சிக்னலை விட்டு 10 அடி பின்னால் நிற்பதை சுட்டிக்காட்டியுள்ளனர்.
ராஜா ராணி
ராஜா ராணி படத்தின் 'ஆம்பளையா இருந்தா வெளில வா' வசனத்தை வைத்து வெளுத்தெடுக்கும் வெயிலை வறுத்தெடுத்துள்ளனர்.
ரமணன் சார்
மழைக்காலத்தில் ரமணனை மீம்ஸ் போட்டு கலாய்த்தது சரி. அதற்காக வெயில் காலத்திலும் கலாய்ப்பது சரியா?
பொன்மேனி உருகுதே
இந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு கேட்குது..
ஒருகோடி
ஒரு கோடி கொடுத்தாலும் 6 மணிக்கு முன்னால வெளில போகமாட்டேன் ஆமா..